ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாகுபலி-2 படத்திற்கு பிறகு பிரபாஸ் நடித்து வரும் படம் சாஹோ. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியாகும் இந்தப்படத்தை ஹிந்தி ரசிகர்களையும் கருத்தில் கொண்டு அதற்கேற்ப உருவாக்கி வருகிறார்கள்.
அதனால், தான் சாஹோ படத்தில் ஸ்ரத்தா கபூர், நீல்நிதின் முகேஷ் உள்பட ஐந்து பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். ஆனால் இந்த நட்சத்திரங்களால் படக்குழுவினருக்கு அவ்வப்போது சங்கடங்கள் ஏற்பட்டு வருகின்றனவாம்.
குறிப்பாக இவர்களில் சிலர் படம் குறித்த விஷயங்களை மூடி மறைக்காமல் வெளியே பரவ விடுகின்றனாராம். படத்தின் நாயகியான ஸ்ரத்தா கபூர், தான் இந்தப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிப்பதுடன், பிரபாஸும் சக போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என முக்கிய தகவலை சமீபத்தில் தான் போட்டுடைத்திருந்தார்.
நடிகர் நீல் நிதின் முகேஷும் இது வழக்கமான மசாலா படம் அல்ல, த்ரில்லர் அம்சங்கள் கொண்ட படம் என வெளிப்படையாக கூறி வருகிறார். இப்படி தகவல்கள் லீக்காவது படக்குழுவினருக்கு சங்கடம் தந்தாலும், பிரபாஸின் ரசிகர்கள் இதனால் குஷியாகியுள்ளார்கள் என்பதும் உண்மை.