சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
பிரபல மலையாள நடிகை சனுஜா. தமிழில் ரேணிகுண்டா, நாளை நமமே, பீமா உள்பட சில படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கண்ணூரிலிருந்து திருவனந்தபுரத்துக்கு ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவர் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தபோது அதே ரெயிலில் ஒரே பெட்டியில் பயணித்த குமரி மாவட்டம் வில்லுக்குறிச்சியை சேர்ந்த ஆண்டோ போஸ் என்பவர் சனுஜாவை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார்.
அவரிடமிருந்து தப்பிய சனுஜா சக பயணிகள் உதவியுடன் அவரை பிடித்து ரெயில்வே போலீசிடம் ஒப்படைத்தார். ரெயில்வே போலீசார் ஆண்டோ போஸை கைது செய்தனர். அவர் மீது திருச்சூர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சாட்சியம் அளிக்க நடிகை சனுஜாவுக்கு கோர்ட் சம்மன் அனுப்பி இருந்தது. இதைத் தொடர்ந்து சனுஜா நேற்று தனது தந்தையுடன் திருச்சூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். நீமன்றத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்ட பிறகு சனுஜா நீதிபதி முன் ரகசிய வாக்குமூலம் அளித்தார். பின்னர் அவர் புறப்பட்டுச் சென்றார். சனுஜா நீதிமன்றம் வந்ததை தொடர்ந்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது.