ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தொடர்ந்து இரண்டு சூப்பர்ஹிட் படங்களை கொடுத்துவிட்டு மூன்றாவது படத்தை ரிலீஸ் செய்ய காலதாமதம் ஆகிறது என்றால் அதில் அர்த்தம் உள்ளது என்பதை புரிந்துகொள்ள வேண்டாமா என வேதனையுடன் கேட்டுள்ளார் 'பூமரம்' படத்தை இயக்கிவரும் இயக்குனர் அப்ரிட் ஷைன். ஏற்கனவே நிவின்பாலியை வைத்து '1983', மற்றும் 'ஆக்சன் ஹீரோ பிஜூ' ஆகிய படங்களை இயக்கியவர் இவர்.
காளிதாஸ் ஜெயராம் மலையாளத்தில் அறிமுகமாகியுள்ள மற்றும் குஞ்சாக்கோ போபன் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்தப்படம் 2017-லேயே வெளியாக வேண்டியது. இப்போது ஒரு வழியாக மார்ச் மாதம் வெளியாகிறது.
“கல்லூரி பின்னணியிலான இந்த கதையை திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் படமாக்க துவங்கியபோதே, இந்தப்படத்தை திட்டமிட்ட நேரத்திற்குள் ரிலீஸ் செய்ய முடியாது என்பதை உணர்ந்தேன். அதனால் தான் ரிலீஸ் தேதியை பற்றி கவலைப்படாமல் படத்தை இயக்கிவந்தேன்” என கூறியுள்ளார் அப்ரிட் ஷைன்.