ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மோகன்லால் தற்போது 'ஒடியன்' மற்றும் 'நீராளி' என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இரண்டுமே புது இயக்குனர்கள் இயக்கும் படங்கள் தான். இதில் ஸ்ரீகுமார் மேனன் என்பவர் இயக்கிவரும் 'ஒடியன்' படம் கடந்த ஒரு வருட காலமாக பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.
இந்தப்படத்தில் விஷுவல் எபெக்ட்ஸ் பணிகளுக்கு நிறைய வேலை இருக்கிறது. தவிர இந்தப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பையே இனிதான் தொடங்க இருக்கிறார்கள். அதேசமயம் இன்னொரு புது இயக்குனரான அஜய் வர்மா என்பவர் இயக்கிவரும்ம் 'நீராளி' படம் வழக்கமான மோகன்லால் பட பட்ஜெட்டில் அக்மார்க் கமர்ஷியல் படமாக உருவாகிறது.
அதன்படி பார்த்தால் இந்தப்படத்தை குறுகியகால தயாரிப்பாக முடித்து வரும் ஏப்ரல் மாதம் சித்திரை விஷுவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளாராம் மோகன்லால்.. 'ஒடியன்' படம் அக்டோபர் மாதம் தான் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.
ரஜினி '2.0' ரிலீஸ் தாமதமாவதால் 'காலா'வை முன்கூட்டியே ரிலீஸ் செய்ய முடிவுசெய்துள்ளதை போல மோகன்லாலும் இப்படி ஒரு அதிரடி முடிவு எடுத்துள்ளாராம்.