ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிக்கும் அவரது 62-வது படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன் சென்னையில் துவங்கியது. இந்த படத்தின் துவக்கத்திலேயே ஷோபி மாஸ்டர் நடன அமைப்பில் ஒரு அதிரடியான குத்துப் பாடலை படமாக்கினர்.
இதுதான் படத்தில் விஜய்யின் அறிமுக பாடல் என்று படக்குழுவினர் தரப்பிலிருந்து தகவல் வெளியானது. சென்னையில் நடைபெற்ற முதல்கட்டப் படப்பிடிப்பை தொடர்ந்து இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கோல்கட்டாவில் நடைபெறுகிறது. அங்கு கிட்டத்தட்ட 20 நாட்கள் நடைபெறும் படப்பிடிப்பில், அதி பயங்கர ஆக்ஷன் காட்சிகளை படமாக்குகின்றனர்.
இந்தக்காட்சிகளை சென்னையிலேயே படமாக்கத்தான் முதலில் திட்டமிடப்பட்டதாம். அதன்பிறகே கோல்கட்டாவில் படமாக்க முடிவு செய்யப்பட்டதாம். கத்தி படத்தின் ஆக்ஷ்ன் பிளாக் கோல்கட்டாவில் படமாக்கப்பட்டது. அப்படம் வெற்றியடைந்தது. எனவே சென்ட்டிமெண்ட் காரணமாக கோல்கட்டாவில் படமாக்க முடிவு செய்தாராம் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ்.
ஸ்பைடர் படத்தின் படுதோல்வி மனுஷனை எப்படி எல்லாம் யோசிக்க வைத்திருக்கிறது பாருங்கள்?