ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ஜெய்சிம்ஹா படத்தில் நடித்த பாலகிருஷ்ணா, அடுத்தபடியாக தனது தந்தையான என்.டி.ராமாராவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் படத்தை தயாரித்து, நடிக்கிறார். இன்னும் சில மாதங்களில் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்த நிலையில், பாலகிருஷ்ணாவுக்கு கையில் ஆபரேசன் நடைபெற்றுள்ளது.
தனது 100வது படமான கவுதமிபுத்ர சட்டகர்னி படத்தில் நடித்தபோது பாலகிருஷ்ணாவின் தோள்பட்டையில் அடிபட்டு பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், தொடர்ந்து வலி இருந்து வந்ததால் ஐதராபாத்திலுள்ள உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை அன்று பாலகிருஷ்ணாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
சிகிச்சைக்குப் பிறகு பாலகிருஷ்ணா நலமுடன் இருப்பதாகவும், அடுத்த மாதம் முதல் என்டிஆர் வாழ்க்கை வரலாறு படவேலைகளில் அவர் ஈடுபடுவார் என்றும் பாலகிருஷ்ணா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையிலிருந்து அவர் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.