ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
மலையாள நடிகர் ஜெயசூர்யா சில தினங்களுக்கு முன்பு திடீர் நிருபராக மாறி சாலையில் இறங்கி மக்களை பேட்டி எடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்துள்ளார். ஒரு ஆங்கில பத்திரிகை ஒன்று தங்களது சிறப்பிதழுக்காக அவரை நிருபராக மாறும்படி கேட்டதும் ஒப்புக்கொண்டார் ஜெயசூர்யா,
அதன்படி சமீபத்தில் தனது 'கேப்டன்' பட இசைவெளியீட்டு விழாவை முடித்துவிட்டு வரும் வழியில் நகரின் முக்கிய சாலையில் இறங்கிய ஜெயசூர்யா, அங்கிருந்த ஆட்டோ ட்ரைவர்களிடம் சமீபத்தில் நடந்த விபத்து ஒன்றில் உயிருக்கு போராடிய இளைஞன் ஒருவரை காப்பாற்ற முன்வராமல் தயங்கிய காரணத்தை கேட்டு அவர்களை அதிர வைத்தாராம்.
அதேபோல காபிஷாப் ஒன்றுக்கு சென்ற ஜெயசூர்யாவிடம் அங்கிருந்த கல்லூரி மாணவிகள், கலாச்சார காவலர்கள் என்கிற பெயரில் தங்களுக்கு தொல்லை தரும் நபர்கள் குறித்தும், அவர்களால் தங்களுக்கான அடிப்படை உரிமைகள் கூட பறிக்கப்படுவது குறித்தும் தங்களது மனக்குமுறல்களை கொட்டினார்களாம்.