ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாள சினிமாவை பொறுத்தவரை வாரிசு நடிகர்களான பிருத்விராஜ், துல்கர் சல்மான், பஹத் பாசில், வினீத் சீனிவாசன் என பலரும் ஹீரோக்களாக நல்ல இடத்தை பிடித்து தங்களை நிலைநிறுத்திக் கொண்டு விட்டார்கள். சமீபத்தில் மோகன்லால் மகன் பிரணவும் 'ஆதி' படம் மூலமாக ஒரு சக்சஸ் ஹீரோவாக தன்னை அடையாளப்படுத்தியுள்ளார்.
ஆனால் மற்ற மலையாள ஹீரோக்களின் வாரிசுகள் போல அல்லாமல், நடிகர் ஜெயராம், தனது மகன் காளிதாஸ் தமிழ் சினிமாவில் தான் அறிமுகமாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஆனால் காளிதாஸ் தமிழில் நடித்த முதல் படமான 'ஒரு பக்க கதை' மற்றும் மலையாளத்தில் முதல் படமாக நடித்துள்ள 'பூமரம்' ஆகிய இரண்டு படங்களும் இன்னும் வெளிவரும் அறிகுறியே தெரியவில்லை.
அதேபோல அவர் அடுத்ததாக படங்களில் நடிப்பதாக தகவலும் இல்லை.. சமீபத்தில் ஜெயராமிடம் இதுகுறித்து கேட்கப்பட்டபோது, “காளிதாஸ் சினிமாவையே சுவாசிக்கிறான்.. சினிமாவுக்காகவே வாழ்கிறான்.. நல்ல படங்கள் கிடைக்க சில வருடங்கள் காத்திருக்கத்தான் வேண்டும் என்றால் அதற்கும் அவன் தயாராகவே இருக்கிறான்” என பதிலளித்துள்ளார்.