ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் சிரஞ்சீவி பிரஜா ராஜ்ஜியம் என்ற கட்சி தொடங்கி அரசியலில் பிரவேசித்தார். ஆனால் அவர் எதிர்பார்த்தபடி அந்த கட்சியை ஆந்திர மக்கள் ஆதரிக்கவில்லை. அதனால் பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கடந்த தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்ததால் இப்போது அரசியலை விட்டு விலகி மீண்டும் முழுநேர நடிகராகியிருக்கிறார் சிரஞ்சீவி.
இந்த நிலையில், அவரது தம்பியான நடிகர் பவன்கல்யாண், தற்போது ஜனசேனா பார்ட்டி என்கிற கட்சியை தொடங்கியிருக்கிறார். அதன்காரணமாக ஆந்திரா, தெலுங்கானாவில் அரசியல் சுற்றுப்பயணம் செய்து வரும் பவன்கல்யாண், சில தினங்களுக்கு முன்பு அனந்தபூரில் விவசாயிகளை சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது, உங்களிடம் ஓட்டு கேட்பதற்காக இங்கே வரவில்லை. நானும் உங்களைப் போலவே விவசாயி தான். அதன்பிறகுதான் நான் நடிகன்.
உலக மக்களின் பசியை போக்கும் விவசாயிகள் பசியில் வாடுகிறார்கள். கடன் சுமையால் கஷ்டப்படுகிறார்கள். அதனால் விவசாயிகளின் கடனை ரத்து செய்ய வேண்டுமென்று நான் போராடப்போகிறேன். இதற்காக விரைவில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள பெருவாரியான விவசாயிகளை சந்திக்கப்போகிறேன் என்று பேசியுள்ளார். பவன்கல்யாணின் இந்த பேச்சுக்கு விவசாயிகள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதாம்.