ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மதயானை கூட்டம் படத்தின் மூலம் அறிமுகமானவர் கதிர். அதன்பிறகு கிருமி படத்தில் நடித்தார், சமீபத்தில் வெளியான விக்ரம் வேதா படத்தில் விஜய் சேதுபதியின் தம்பியாக நடித்தார். சிகை, சத்ரு, பரியேறும் பெருமாள் படங்களில் நடிக்கும் கதிர், சிகை படத்தில் திருநங்கையாக நடிக்கிறார். இந்தப் படத்தை அவர் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் கதிர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்புகள் நேற்று பூஜையுடன் தொடங்கியது. இதனை எம்.புரொடக்ஷன் சார்பில் பாரிவள்ளல் தயாரிக்கிறார். பாண்டி அருணாச்சலம் ஒளிப்பதிவு செய்கிறார். நவீன் சங்கர் இசை அமைக்கிறார். பட்டுக்கோட்டை ரஞ்சித் கண்ணா இயக்குகிறார் படம் பற்றி அவர் கூறியதாவது:
இது கிராமத்திலிருந்து நகரம் செல்கிற கதை. கிராமத்திலிருக்கும் வாலிபனான நாயகன், ஒரு பெரிய பிரச்னைக்காக சென்னை செல்ல வேண்டியிருக்கிறது. நாயகன் அந்தப் பிரச்னையை எப்படி எதிர்கொண்டான் முடிவு என்ன என்பதே கதை. அது என்ன பிரச்னை? சமீபத்தில் நாட்டையே கலங்க வைத்த பிரச்னை தான் அது.
இப்படத்தின் கதையை உருவாக்கி அதற்கான சரியான நாயகன் தேடிய போது வெகு பொருத்தமாகக் கிடைத்தவர் தான் கதிர். அவர் கதை பிடித்து சம்மதித்தவுடன் எங்களுக்கு முழு திருப்தி. கதிருக்கு மதயானைக் கூட்டம் , கிருமி படங்களுக்குப் பிறகு இப்படம் பெயர் சொல்லும் ஒன்றாக இருக்கும். தஞ்சைப் பகுதியில் தொடங்கும் படப்பிடிப்பு, கடம்பூர் மலைப் பகுதி, சென்னை என்று நகர இருக்கிறது. பென்ஹர், உழவன் மகன் படங்களுக்குப் பிறகு இப்படத்தில் வரும் ரேக்ளா வண்டி ரேஸ் பேசப்படும்" என்றார் இயக்குநர் ரஞ்சித் கண்ணா.