ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பழம்பெரும் பெங்காலி நடிகை சுப்ரியாதேவி நேற்று மரணம் அடைந்தார் அவருக்கு வயது 85. கோல்கட்டாவில் தனது மகள் வீடடில் வசித்து வந்த சுப்ரியாதேவி முதுமை காரணமாக சினிமாவில் இருந்து விலகி ஓய்வெடுத்து வந்தார். நேற்று அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பாணர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது உடலுக்கு பெங்காலி மற்றும் இந்தி திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மாநில அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
1933ம் ஆண்டு பிறந்த சுப்ரியாதேவி, பாசு பரிவார் என்ற படத்தின் மூலம் 1952ம் ஆண்டு அறிமுகம் ஆனார். 50 படங்களுக்கு மேல் நடித்துள்ள சுப்ரியா தேவி, வங்காள சினிமாவில், தனக்கென தனி இடம் பிடித்தவர். மத்திய அரசின் பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளை பெற்றிருக்கிறார்.