ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த வருடம் மோகன்லால் நடிப்பில் வெளியான 'புலி முருகன்' படத்தில் இருந்து ஜேசுதாஸ் - சித்ரா பாடிய 'காலனையும் கால்சிலம்பே' மற்றும் வாணி ஜெயராம் பாடிய 'மானத்தே மாடக்குரும்பே' ஆகிய இரண்டு பாடல்களும், புலி முருகன் பின்னணி இசையும் 2018-ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் பரிந்துரைக்கப்பட்டு இருந்தன.
இந்தப்படத்திற்கு கோபிசுந்தர் இசையமைத்திருந்தார். ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் பாடல்கள் பிரிவில் கலந்துகொள்ள இந்தியாவில் இருந்து தேர்வாகியிருக்கும் ஒரே படம் 'புலி முருகன்' தான் என ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்தநிலையில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் இருந்து மோகன்லாலின் 'புலி முருகன்' வெளியேறியுள்ளது.. இந்த செய்தி மலையாள ரசிகர்களை சற்றே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.