14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
மலையாள இயக்குனர்கள் பாலிவுட்டில் படம் இயக்குவது என்பது அவ்வப்போது நடந்து கொண்டு தான் இருக்கிறது. இயக்குனர் பிரியதர்ஷன், சித்திக் ஆகியோர் இந்தியிலும் வெற்றிக்கொடி நாட்டியுள்ளனர். இந்தநிலையில் இயக்குனர் ஜீத்து ஜோசப் தனது அடுத்த படத்தை பாலிவுட்டில் தான் இயக்கவுள்ளாராம்.
தற்போது மோகன்லால் மகனை வைத்து இவர் இயக்கியுள்ள 'ஆதி' படம் நாளை வெளியாகிறது. இதை தொடர்ந்து பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஸ்மியை ஹீரோவாக வைத்து படம் இயக்கவுள்ளதாக சமீபத்தில் ஒரு பேட்டியில் அவரே கூறியுள்ளார். இது ஒரு ஹாலிவுட் த்ரில்லரின் ரீமேக்காக இருக்கும் என்று சொல்லபடுகிறது.
இவர் இயக்கிய 'த்ரிஷ்யம்' படம், பாலிவுட்டில் அஜய் தேவ்கன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டாலும், மற்ற மொழிகளைப்போல பெரிய வரவேற்பை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.