ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகை டிம்பிள் கபாடியாவின் உறவினரான கரண் கபாடியா, பாலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமாகிறார். இப்படத்தை பெசாத் கம்பாடா இயக்க, டோனி டிசோஷா மற்றும் விஷால் ராணா தயாரிக்கிறார்கள். படத்தில் நடிக்கும் நடிகர்கள் தேர்வு நடந்து வந்தது. அதில் ஒரு முக்கியமான ரோலில் நடிகர் சன்னி தியோல் நடிக்க உள்ளார்.
இதுகுறித்து தயாரிப்பாளர் டோனி கூறுகையில், இயக்குநர் பெஷாத் திரைக்கதையை எழுதி முடித்தவுடனேயே இப்படத்தில் உள்ள ஒரு முக்கியமான ரோலில் சன்னி தியோல் தான் நடிக்க வேண்டும் என்று கூறினார். அவரிடம் பேசினோம், சம்மதம் சொல்லியிருக்கிறார் என்றார்.
படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை, நேற்று முதல் படப்பிடிப்பு ஆரம்பமாகி உள்ளது. ஏப்ரல் அல்லது மே மாதத்திற்குள் படப்பிடிப்பை முடித்து இந்தாண்டுக்குள் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர்.