ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஸ்டூடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல்ராஜா தமிழ் சினிமாவின் முக்கிய தயாரிப்பாளர். சூர்யாவின் வலது கரமாக இருப்பவர். நெருங்கிய உறவினர். தயரிப்பாளர் சங்கத் தேர்தலில் விஷாலின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தவர். விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்த நிலையில் நேற்று நடந்த தானா சேர்ந்த கூட்டம் படத்தின் நிகழ்வில் மனம்விட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு உத்தம வில்லன் படம் வெளியானதில் இருந்து பல்வேறு சோதனைகளை சந்தித்து வருகிறேன். நண்பர்களுக்கு உதவி செய்யப்போய் அதற்காக நிறைய இழந்தேன். நான் உதவி செய்ததை கடன் என்றார்கள், எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டேன். யாரையும் நான் குறை சொல்லவில்லை. இரண்டரை ஆண்டுகளில் நிறைய பாடம் படித்து விட்டேன்.
நல்லவனாக வாழ்வதை விட வல்லவனாக வாழ்வது தான் சிறந்தது என்பதை புரிந்து கொண்டேன். இரண்டரை ஆண்டுகளில் என்னை பெற்றவர்கள் உடன் பிறந்தவர்கள், உறவினர்களின் மனவருதத்திற்கு நான் காரணமாக இருதுந்து விட்டேன். இனிமேல் என்னோடு இருப்பவர்களுக்கு இடைஞ்சல் கொடுக்கும் முடிவுகளை வாழ்கையில் நான் எப்போதும் எடுக்க மாட்டேன்.
எல்லா பிரச்சினைகளிலிருந்தும் வெளியே வந்து விட்டேன். சினிமாவில் இதுதான் என் முதல் நாள் என்று கருதிக் கொண்டு எனது பயணத்தை புதிதாக தொடர்கிறேன். தானா சேர்ந்த கூட்டம் படத்துக்கு என்னுடைய பங்களிப்பை என்னால் சரியாக கொடுக்க முடியவில்லை. அனைத்தையும் பொறுத்துக் கொண்ட சூர்யா, விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு நன்றி.
தானா சேர்ந்த கூட்டம், ஸ்பெஷல் 26 படத்தின் ரீமேக் என்று நாங்கள் கூறி வருகிறோம். ஆனால் அந்த படத்தில் உள்ள ஒரு சம்பவத்தை மட்டும் வைத்துக்கொண்டு விக்கி இப்படத்துக்கு புதுமையான ஒரு திரைக்கதையை அமைத்துள்ளார். ஒரு நேரடி தமிழ் படத்துக்கு என்ன உழைப்பு தேவையோ அதைவிட பல மடங்கு உழைப்பை விக்கி இந்த படத்துக்கு கொடுத்துள்ளார் என்றார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா.