ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மம்முட்டி நடித்த கசபா படம் பற்றி கேரளாவில் நடந்த சர்வதேச பட விழாவில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார் பார்வதி. இது மம்முட்டி ரசிகர்களுக்கு கடும் கோபத்தை உண்டாக்கியது.
சமூக வலைத்தளங்களில் பார்வதியை கடுமையாக விமர்சித்தனர். சில ரசிகர்கள் எல்லை தாண்டி பார்வதிக்கு பாலியல் ரீதியான மிரட்டலும், கொலை மிரட்டலும் விடுத்தனர். இதனால் பார்வதி கேரள போலீஸ் டி.ஜி.பியிடம் இது குறித்து புகார் கொடுத்தார்.
கேரள போலீசின் சைபர் க்ரைம் பிரிவினர் சமூக வலைத்தளங்களை ஆய்வு செய்து பார்வதிக்கு கொலைமிரட்டல் விடுத்த ரசிகர்களை தேடி வந்தனர். இந்த தேடலில் வடக்கன் சேரியை சேர்ந்த பிரிண்டோ என்ற மம்முட்டி ரசிகர் கைது செய்யப்பட்டார்.
தற்போது பார்வதிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் மிரட்டல் விடுத்த கொல்லம் மாவட்டம், சாத்தனூரைச் சேர்ந்த மற்றுமொரு மம்முட்டி ரசிகர் ராஜன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது நடவடிக்கைகள் தொடர்கிறது. மேலும் சிலர் கைது செய்யப்படாலாம் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இந்த நிலையில் தனக்கு ஆதரவளிப்பதாக நினைத்துக் கொண்டு யாரும் அநாகரீகமாக நடந்து கொள்ள வேண்டாம் என்று கூறியிருக்கிறார் மம்முட்டி இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது:
நான் தற்போது நிலவி வரும் கசாபா பட சர்ச்சைக்குள் நுழைய விரும்பவில்லை. தற்போது நமக்கு தேவை அர்த்தமுள்ள விவாதம் தான். இந்த பிரச்னை எழுந்த உடனேயே நான் நடிகை பார்வதியை தொடர்பு கொண்டு அவரிடம் பேசி ஆறுதல் கூறினேன். நம்மை போன்றவர்கள் இது போல விமர்சனங்களை எதிர்கொள்ள தான் வேண்டும் என்று அவரிடம் கூறினேன். எனக்கு ஆதரவு தெரிவிப்பதாக இது போன்று அநாகரீகமாக யாரும் நடந்து கொள்ள வேண்டாம். நான் வெளிநாட்டில் இருந்ததால் இந்த சர்ச்சை பற்றி உடனே பதில் அளிக்க முடியவில்லை என்கிறார் மம்முட்டி.