ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் மம்முட்டி, மலையாளத்தில் தான் நடித்த 'கசபா' படத்தில், பெண் கதாநாயகியை பார்த்து தரக்குறைவான வார்த்தைகள் பேசியது தனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியதாக நடிகை பார்வதி சமீபத்தில் கூறியிருந்தார். ஒரு முன்னணி நடிகர் இப்படி பேசுவது ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் எனவும் அவர் கூற, அதற்கு மம்முட்டி ரசிகர்கள் ரொம்ப மோசமாகவே பார்வதியை விமர்சித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் கேரளாவின் நிதியமைச்சர் தாமஸ் இசாக், பார்வதிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். பார்வதி துணிச்சலாக தனது கருத்துக்களை கூறியதற்கு பாராட்டு தெரிவித்துள்ள அவர், பார்வதியை சோஷியல் மீடியாவில் மோசமாக விமர்சிப்பவர்கள் மீது சைபர் கிரைம் போலீஸார் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தும் உள்ளார் தாமஸ் இசாக்.