ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
தமிழில் சுதா இயக்கிய இறுதிச்சுற்று படத்தில் நடித்த மாதவன், அதன்பிறகு அந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்குப் பதிலாக வெங்கடேஷ் நடித்தார். தமிழில் நடித்த ரித்திகா சிங் அதே கேரக்டரில் மீண்டும் நடித்தார். அந்த படமும் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், ஏற்கனவே தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ள மாதவன், தற்போது நாகசைதன்யா நடித்து வரும் ஷ்வ்யசச்சி என்ற படத்தில் ஒரு முக்கிய மேஜர் கேரக்டரில் நடித்துள்ளார். இந்த வேடத்திற்காக மாதவனை முதலில் அணுகியபோது தனது கதாபாத்திரம் பெரிதாக இல்லாததால் நடிக்க தயங்கினார். அதன் காரணமாக, பின்னர் அவரது கேரக்டருக்கான முக்கியத்துவத்தை அதிகப்படுத்தி அவரை நடிக்க வைத்தார் இயக்குனர் சந்து மண்டடி.
மேலும், இந்த திரில்லர் படத்தில் கடந்த 20நாட்களாக நடித்து வந்த மாதவன், தற்போது அந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டார். நேற்று முன்தினம் இரவோடு முதல்கட்ட படப்பிடிப்பில் நடித்து முடித்துள்ள மாதவன், மீண்டும் அடுத்த மாதம் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்கிறாராம்.