ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சிவகார்த்திகேயன், பஹத் பாசில், நயன்தாரா இணைந்து நடித்துள்ள 'வேலைக்காரன்' படம் வரும் டிச-22ஆம் தேதி ரிலீஸாகிறது. அனிருத் இசையமைத்துள்ள இந்தப்படத்தை மோகன்ராஜா இயக்கியுள்ளார். இந்தப்படத்தின் கேரளா வெளியீட்டு உரிமையை பிரபலமான ஈ4 என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் மிகப்பெரிய விலைக்கு கைப்பற்றியுள்ளது.
சிவகார்த்திகேயன் படங்களுக்கு கேரளாவில் நல்ல மார்க்கெட் இருந்தாலும் கூட, இந்தப்படத்தை இன்னும் அதிக விலைக்கு வாங்கியதற்கு மிக முக்கியமான காரணங்கள் இதில் மலையாள நடிகர் பஹத் பாசிலும், நாயகியாக நயன்தாராவும் நடித்துள்ளது தான்.
மேலும் 'தனி ஒருவன்' படம் தந்த இயக்குனர் மோகன்ராஜாவின் படம் என்கிற எதிர்பார்ப்பும் இதில் சேர்ந்துள்ளது. இதே நிறுவனம் தான் மலையாளத்தில் பஹத் பாசில் நடித்த இரண்டு தேசிய விருது படங்களையும் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.