ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த வருடம் மலையாளத்தில் வெளியான படங்களில் நூறு கோடி வசூலையும் தாண்டி நம்பர் ஒன் பிளாக் பஸ்டர் படமாக அமைந்தது 'புலி முருகன்' படம். இந்தப்படத்தின் வெற்றிக்கு முக்கிய தூணாக விளங்கியவர்களில் கதாசிரியர் உதய கிருஷ்ணாவும் ஒருவர். இவர் தான் தற்போது டென்ஷனில் நகத்தை கடித்தபடி இருக்கிறாராம்.
கிறிஸ்துமஸ் ரிலீஸாக வரும் டிச-21ஆம் தேதி வெளியாகவுள்ள மம்முட்டி நடித்த 'மாஸ்டர்பீஸ்' படம் தான் இந்த டென்ஷனுக்கு காரணமாம். 'புலி முருகன்' படத்தை தொடர்ந்து அடுத்ததாக உதயகிருஷ்ணா கதை எழுதியுள்ளது இந்தப்படத்திற்குத்தான்.
மோகன்லாலுக்கு தனது கதை பம்பர் ஹிட் கொடுத்தது போல இல்லாவிட்டாலும், அட்லீஸ்ட் மம்முட்டிக்கு இந்தப்படம் சூப்பர் ஹிட்டாகவாவது அமைந்தால் தான் தனது பெயரை தக்கவைப்பதுடன், மம்முட்டி ரசிகர்களிடமும் நல்ல பெயரை எடுக்க முடியும் என்பதனால் தான் இந்த டென்சனாம்.