ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த சில மாதங்களுக்கு முன் மோகன்லால் ஹீரோவாக நடிக்க 'லூசிபர்' என்கிற படத்தின் மூலம் தான் டைரக்சன் துறையில் அடியெடுத்து வைக்க இருப்பதாக நடிகர் பிருத்விராஜ் அறிவித்தார். ஒருபக்கம் மோகன்லாலும் இன்னொரு பக்கம் பிருத்விராஜூம் மாறிமாறி பிஸியாக நடித்துக்கொண்டிருப்பதால் இந்த அறிவிப்பு அப்படியே காற்றில் போய்விடுமோ என இருதரப்பு ரசிகர்களும் கவலைப்பட்டு வந்தார்கள்..
ஆனால் இதில் எந்த மாற்றமும் இல்லை என சமீபத்தில் கூறியுள்ளார் பிருத்விராஜ். வரும் பிப்ரவரியில் 'ஆடு ஜீவிதம்' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்கிறாராம் பிருத்விராஜ்.. அதே படத்திற்காக உடல் எடையை குறைக்க சில மாதங்கள் இடைவெளி எடுத்துக்கொண்டு இரண்டாம் கட்ட படப்பிடிப்பை துவங்க இருக்கிறாராம்.
இந்த இடைவெளியில் தான் மோகன்லாலின் 'லூசிபர்' படத்தை இயக்கி முடிக்க திட்டமிட்டுள்ளாராம் பிருத்விராஜ். அதற்கேற்ப மோகன்லாலும் இப்போதே தேதிகளை ஒதுக்கி தந்துவிட்டாராம்.