வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது |
சத்ரியன், நெருப்புடா படங்களுக்குப் பிறகு பக்கா என்ற படத்தில் நடித்து வருகிறார் விக்ரம் பிரபு. இந்த நிலையில், அடுத்தபடியாக அவர் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. அதாவது, நேற்று முன்தினம் தனது இணைய பக்கத்தில் எனது அடுத்த படம் குறித்த தகவலை நாளை வெளியிடுவேன் என்று தெரிவித்திருந்த விக்ரம் பிரபு, தான் ஒரு துப்பாக்கியுடன் நிற்கும் போட்டோவையும் வெளியிட்டிருந்தார்.
அப்படி முதல் நாளே அடுத்த படம் குறித்த டைட்டீலை சூசகமாக அறிவித்திருந்த நிலையில், நேற்று விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்தின் பெயர் துப்பாக்கி முனை என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் அந்த படத்தை தினேஷ் செல்வராஜ் என்பவர் இயக்குகிறார். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கயிருக்கும் இந்த துப்பாக்கி முனை படத்தில் போலீஸ் ஆபீசராக நடிக்கிறார் விக்ரம் பிரபு.