14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
நடிகர் திலீப் கேரளாவில் கொச்சியில் 'தே புட்டு' என்கிற ரெஸ்டாரண்ட்டை நடத்தி வருகிறார். இதன் கிளை ஒன்றை துபாயில் திறக்க விரும்பி அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். இந்தநிலையில் தான் அவர் நடிகை வழக்கில் சிக்கி சிறை சென்றார். தற்போது திலீப் ஜாமீனில் வெளிவந்துள்ளதை தொடர்ந்து துபாயில் உள்ள ரெஸ்டாரன்ட் கிளையை திறக்க, துபாய் செல்வதற்கு நீதிமன்றம் அவருக்கு அனுமதி அளித்தது..
திலீப் மற்றும் அவரது இயக்குனர் நண்பரான நாதிர்ஷா ஆகியோருடன் சேர்த்து மொத்தம் ஏழு பேர் பங்குதாரர்களாக இருக்கும் இந்த ரெஸ்டாரண்ட்டின் திறப்பு விழா நேற்று முன்தினம் இரவு துபாயில் கோலாகலமாக நடைபெற்றது. திலீப்பின் அம்மா உட்பட மற்ற பங்குதாரர்களின் அம்மாக்கள் ஒன்று சேர்ந்து இந்த ரெஸ்டாரண்ட்தை திறந்து வைத்தனர். இந்த ரெஸ்டாரன்ட் அமைந்துள்ள அல் கமாரா பகுதியில் திலீப்பை பார்க்க கூடிய கூட்டத்தால் அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதித்தது.