ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள உராய் மாவட்டத்தில் உள்ள கிளை சிறைக்குள் புகுந்த சில கழுதைகள் அங்கிருந்த உயர்வகை தாவரங்களை தின்று விட்டன. இதனால் கழுதைகளை கைது செய்த சிறை நிர்வாகம் அவைகளை 4 நாட்கள் சிறைக்குள்ளேயே பட்டினிபோட்டு பின்பு விடுதலை செய்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை கிளப்பி உள்ளது. கழுதைகள் கைது சம்பவத்திற்கு பார்த்திபன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் எழுதியிருப்பதாவது:
தாவரங்களை தின்ற குற்றத்திற்காக வாய் இல்லாத ஜீவன்களை கைது செய்துள்ளனர். கட்சி தாவுரவங்களை... தாவி... இந்த சமூகத்தையே கடித்து தின்று ஏப்பம் விடும் அரசியல்வாதிகளின் போஸ்டரை தின்றால் விஷமாகிவிடும் என்று பயந்தே அவைகள் தாவரங்களை தின்றுள்ளன என்று கிண்டலாக எழுதியிருக்கிறார்.