துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் |
தயாரிப்பாளர் அசோக் குமார் தற்கொலை வழக்கில், தேடப்பட்டு வரும் பைனான்சியர் அன்பு செழியன் தலைமறைவாக உள்ளார். அவர் எங்கிருக்கிறார் என்று இதுவரை போலீசாரால் கண்டுபிடிக்கவில்லை. மூன்று தனிப்படை அமைத்து அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், அன்புசெழியனின் நண்பர் முத்துக்குமாரை அழைத்து போலீஸ் விசாரித்து உள்ளனர். சென்னை ஜாபர்கான் பேட்டையில் உள்ள கட்டுமான நிறுவன அலுவலகத்தில் இருந்த முத்துகுமாரை போலீசார் மடக்கி பிடித்துள்ளனர். அன்புசெழியனும், முத்துகுமாரும் ஐதராபாத் சென்று வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால் அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேப்போன்று அன்பு செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் மேலாளரான சாதிக்கையும் போலீசார் ரகசியமாக அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.