ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
தெலுங்கு சினிமாவில் பாகுபலி நாயகன் பிரபாஸ் - கோபிசந்த் ஆகிய இருவரும் நல்ல நண்பர்கள். 2004-ல் சோபன் இயக்கத்தில் தெலுங்கில் உருவான வர்ஷம் என்ற படத்தில் இணைந்து நடித்தனர். அந்த படத்தில திரிஷா நாயகியாக நடித்திருந்தார். அதையடுத்து அவர்கள் எந்த படத்திலும் இணையவில்லை.
இந்த நிலையில், தற்போது பாகுபலி-2விற்கு பிறகு சாஹோ படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ். கோபிசந்த் ஆக்சிஜன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் நவம்பர் 30-ந்தேதி வெளியாகிறது. இதையடுத்து மீண்டும் பிரபாசுடன் இணைந்து நடிக்க நல்ல ஸ்கிரிப்ட் தேடி வருவதாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார் கோபிசந்த். என்னைப்போலவே பிரபாசும் எங்களுக்கு பொருத்தமான கதை தேடிக்கொண்டு வருகிறார். அப்படி நாங்கள் எதிர்பார்க்கும் கதை ரெடியானதும் மீண்டும் இணைந்து நடிப்போம் என்கிறார் கோபிசந்த்.