ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர் பிரகாஷ்ராஜ் தற்போது கமல்ஹாசன் போன்று அரசுக்கு எதிரான கருத்துக்களை பேசியும், எழுதியும் வருகிறார். அவரது தோழியும், பத்திரிகையாளருமான கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டதை கண்டிக்காத பிரதமரை, என்னை விட சிறந்த நடிகர் என்று விமர்சித்தார். ரூபாய் நோட்டு மதிப்பிழப்பால் பயன்பெற்றது பணக்காரார்கள்தான் என்றார்.
இதனால் பா.ஜ.க.வினர் பிரகாஷ்ராஜை எதிர்த்து போராட்டம் நடத்தினர். அவரது சொந்த மாநிலமான கர்நாடகாவில் அவருக்கு கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்த நிலையில் மைசூர் எம்.பி பிரதாப் சிம்ஹா "பிரகாஷ்ராஜ் தன் மகன் இறந்த துக்கத்திலும் மனைவியை விட்டுவிட்டு நடனக்காரியுடன் குடும்பம் நடத்தியவர்" என்று கூறியிருந்தார்.
இது பிரகாஷ்ராஜை கோபப்படுத்தியது. "தர்க்க ரீதியாக எனக்கு பதில் சொல்ல முடியாதவர்கள் என் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்கிறார்கள்" என்றார். மைசூர் எம்.பி. பிரதாப் சிம்ஹாவுக்கு இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதுகுறித்து பிரகாஷ்ராஜ் கூறியதாவது:
மத்திய அரசை நான் விமர்சிப்பது பொதுநலம் விரும்பும் அரசியல் ரீதியானது. ஆனால் பா.ஜ.க எம்.பி பிரதாப் சிம்ஹா என்னை தனிப்பட்ட முறையில் ஆபாசமாக விமர்சித்து வருகிறார். என் மகன் உயிரிழந்ததையும், என் தனிப்பட்ட வாழ்க்கையையும் மோசமாக சமூக வலைத்தளங்களில் பதிவிடுகிறார். ஒரு பார்லிமென்ட் உறுப்பினர் இப்படி பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்ளலாமா? அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளேன். இதற்கு 10 நாட்களுக்குள் அவர் பதில் அளிக்காவிட்டாலோ, மன்னிப்பு கேட்காவிட்டாலோ அவர் மீது கிரிமினல் வழக்கு தொடர்வேன் என்கிறார் பிரகாஷ்ராஜ்.