ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பலதரப்பட்டவர்களின் வரவேற்பை பெற்றுள்ள படம் அறம். இந்தப் படத்தில் நயன்தரா இரண்டு சேலைகள் மட்டுமே அணிந்து நடித்திருப்பார். ஒரு சேலை அவரை உயர் அதிகாரி விசாரிக்கும்போது அணிந்திருப்பது. இன்னொரு சேலை அவர் களத்தில் நின்று பணியாற்றும்போது அணிந்திருப்பது. இந்த க்ரே கலர் சேலையைத்தான் அவர் கடைசி வரை அணிந்திருப்பார். இது ஏன் என்பது குறித்து படத்தின் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் கூறியிருப்பதாவது:
நயன்தாராவுடன் நான் இணைந்து பணிபுரிவது இது மூன்றாவது படம். ஆரம்பம், காஷ்மோரா படங்களுக்கு பிறகு இப்படத்தின் நயன்தாராவுடன் பணியாற்றியுள்ளேன். அவர் போன்ற அர்ப்பணிப்புள்ள நடிகையோடு பணிபுரிவது என்றுமே ஒரு அற்புதமான அனுபவம். அவரது ஈடுபாட்டை கண்டு அசந்துள்ளேன். இக்கதையின் மேல் இயக்குனர் கோபி நைனார் வைத்திருந்த நம்பிக்கையும் அவரது எழுதும் தான் இப்படத்தை இவ்வளவு சிறந்த படமாக்கியுள்ளது .வார்த்தைகளால் சொல்லமுடியாத திருப்தியையும் பெருமையையும் அறம் எனக்கு கொடுத்துள்ளது .
எனது சினிமா வாழ்க்கையில் சிறந்த படங்களில் ஒன்று அறம். இப்படத்தின் கதையை முதல் முறையாக கேட்ட பொழுதே, அழிந்து வரும் நமது பூமியின் அவல நிலையை சித்தரிக்க க்ரே கலரை பயன்படுத்தி, அதற்கான லைட்டிங்கை கொடுத்து, சில ஒளிப்பதிவு தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என முடிவு செய்தேன். இதற்கு ஏற்பதான் நயன்தாரா அவர்களின் ஆடையும் வடிவமைக்கப்பட்டது.
நயன்தாரா நேர்மையான கலெக்டர், நேர்மையானவர்கள் எப்போதும் எளிமையானவர்களாக இருப்பார்கள். அதானல் எந்த டிசைனும் செய்யப்படாத காட்டன் சேலையை அவருக்கு காஸ்ட்டியூமாக தேர்வு செய்தோம். வறண்ட பூமி, கண்ணீருடன் மக்கள், ஒரு பெரும் பிரச்சினை இவற்றுக்கு நடுவில் நயன்தாரா பளபள வண்ண உடை அணிந்து வந்தால் அது உறுத்தலாக இருக்கும். இதனால் அந்த மண்ணுக்கேற்ற க்ரே கலர் தேர்வு செய்யப்பட்டது.
வறண்ட பூமி, கடும் வெயில் போன்ற அம்சங்களால் படப்பிடிப்பு சிரமமாக இருந்தது. ஆழ்குழாய் காட்சிகளில் பயத்தை கொண்டு வருவது அவசியம். அதற்காக சில பிரத்தியேக லென்ஸை பயன்படுத்தினேன்.
இவ்வாறு ஓம் பிரகாஷ் கூறினார்.