ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரபல பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ், சுவாமி அய்யப்பன் என்ற படத்தில் பாடிய பாடல் ஹரிவாராசனம்... இந்தப் பாடல் கேரள மக்களை மிகவும் கவர்ந்ததால் இந்தப் பாடல் சபரிமலை அய்யப்பன் கோவிலில் இரவு நடை சாத்தும் போது ஒலிக்கும் பாடலாக பல ஆண்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பாடலில் சுவாமி என்ற வார்த்தை விடுபட்டுள்ளது என்றும், ஹரி, விமர்த்தனம் என்ற இரண்டு வார்த்தைகளை ஜேசுதாஸ் ஒரே வார்தையாக பாடியுள்ளார் என்றும் அதனால் இவற்றை திருத்தி மறுபதிவு செய்ய கோவில் தேவசம் போர்டு முடிவு செய்தது.
இந்த முடிவுக்கு பாடலுக்கு இசை அமைத்துள்ள பழம்பெரும் இமை அமைப்பாளர் தேவராஜன் பெயரில் நடத்தப்பட்டு வரும் அறக்கட்டளை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சதீஷ் ராமச்சந்திரன் கூறியதாவது:
ஹரிவாரசனம் பாடலில் பிழை இருப்பதாக புகழ்பெற்ற இசை கலைஞர்களோ, சமஸ்கிருத அறிஞர்களோ கூறவில்லை. இசை பற்றியும் யாரும் குறைத்து மதிப்பிடவில்லை. அப்படி இருக்கும்போது இந்த பாடலை ஏன் மறுபதிவு செய்ய வேண்டும். இது யாரோ சிலரின் கூட்டு சதியாகவே தெரிகிறது. தேவராஜனின் புகழுக்கும், திறமைக்கும் இழுக்கு ஏற்படுத்துகிற செயல் இது. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என்கிறார் சதீஷ் ராமச்சந்திரன்.