ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஆர்.ஸ்டுடியோஸ், விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேசன் இணைந்து தயாரித்துள்ள படம் அண்ணாதுரை. ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ள இந்த படத்தின் நாயகன் விஜய் ஆண்டனியே இசையமைத்திருப்பதோடு எடிட்டிங்கும் செய்துள்ளார். இந்த படத்தின் இசை விழா சென்னையில் நடைபெற்றது.
அப்போது ராதிகா சரத்குமார் பேசுகையில், இந்த அண்ணாதுரை படத்தின் கதையை முதலில் என் கணவர் சரத்குமார் தான், டைரக்டர் ஸ்ரீனிவாசனிடம் கேட்டார். கதையை கேட்டு கண்கலங்கி விட்டார். அதையடுத்து என்னையும் கேட்க சொன்னார். கதை ரொம்ப பிரமாதமாக இருந்தது. அதையடுத்து இந்த கதையில் யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்தபோது விஜய் ஆண்டனி நடித்தால் சரியாக இருக்கும் என்றார்கள். பின்னர் அவரிடம் கதை சொல்லப்பட்டு அவருக்கு ஓகே என்றதும் இந்த படத்தை தயாரிக்க முடிவு செய்தோம்.
நான் தயாரித்த சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலுக்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார். அதன்பிறகும் சில பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். அவருடன் ஏற்கனவே அறிமுகம் இருந்தது. பின்னர், அவர் நடிகராகி விட்டார் என்று சொன்னபோது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவர் நடித்த பிச்சைக்காரன் படத்தைப்பார்த்து இன்னும் ஆச்சர்யப்பட்டேன். ஒரு இசையமைப்பாளரான அவர் அத்தனை சிறப்பாக நடித்திருந்தார்.
அதேபோல் இப்போது அண்ணாதுரை படத்தில் இன்னும் சிறப்பாக நடித்துள்ளார். நேரில் பார்க்கும்போது பூனை மாதிரி இருக்கிறார் விஜய் ஆண்டனி. ஆனால் கேமரா முன்பு சென்று விட்டால் வேற மாதிரியாகி விடுகிறார். இப்படித்தான் ஜோசப் விஜய்யும் பூனை மாதிரி இருப்பார். கேமரா முன்பு சென்று விட்டால் அவ்வளவு பிரமாதமாக நடிப்பார். விஜய் என்ற பெயர் உடையவர்களே இப்படித்தான் இருப்பார்கள் போலிருக்கு என்றார்.