ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'காற்று வெளியிடை' படத் தோல்விக்குப் பிறகு மணிரத்னம் அடுத்து இயக்க உள்ள படத்தில் ஜோதிகா, சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளார்கள். இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களிலேயே பலர் நடிப்பதால் ஒருவர் சரியாக படப்பிடிப்புக்கு வரவில்லை என்றால் கூட படத்தைத் திட்டமிட்டபடி முடிக்க முடியாது.
மணிரத்னம் படத்தில் சிம்பு நடிக்கிறார் என்றதுமே பலரும் ஆச்சரியப்பட்டார்கள். சிம்பு அவருடைய அப்பா தயாரித்த படப்பிடிப்புக்கே சரியாகப் போக மாட்டார். அவரை நம்பி எப்படி மணிரத்னம் அவருடைய படத்தில் ஒப்பந்தம் செய்தார் என்றெல்லாம் கோலிவுட்டில் கேள்விகள் எழுந்தன. அதனால் மணிரத்னம் ஒப்பந்தம் போடும் போதே படப்பிடிப்புக்கு சொன்னபடி சரியான நேரத்தில் வர வேண்டும் என்ற ஒரு கண்டிஷனை சேர்த்திருக்கிறாராம்.