ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
அரசியல் பிரவேசத்திற்கு பிறகு சிரஞ்சீவி மீண்டும் சினிமாவில் நடித்த படம் கைதி எண் 150. இந்த படம் தமிழில் விஜய் நடித்த கத்தி படத்தின் ரீமேக் ஆகும். அதையடுத்து ஆந்திராவில் வாழ்ந்த சுதந்திர போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாறு கதையில் நடிக்கிறார் சிரஞ்சீவி. சைரா நரசிம்ம ரெட்டி என்ற பெயரில் உருவாகும் இப்படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார். இந்த படத்தில் சிரஞ்சீவியுடன் அமிதாப்பச்சன், சுதீப், விஜய் சேதுபதி, நயன்தாரா உள்பட பலர் நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில், படப்பிடிப்பு டிசம்பர் 6-ந்தேதி முதல் ஐதராபாத்தில் தொடங்குகிறது. இந்த படத்திற்காக பிரமாண்ட செட் போடும் பணிகள் கடந்த சில மாதங்களாகவே நடந்து கொண்டிருக்கிறது. மேலும், பிரிட்டீஷ்காரர்கள் இந்தியாவை ஆண்ட காலத்து கதை என்பதால், இந்த படத்தில் நடிப்பதற்காக 200 இங்கிலாந்து நடிகர்கள் இறக்குமதி செய்யப்பட உள்ளனர். அவர்கள் பலர் ஜூனியர் நடிகர்களே என்றாலும், சிலர் முக்கியமான கேரக்டர்களிலும் நடிக்கிறார்களாம்.