ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பல பிரச்சனைகளை எதிர் கொண்டு, வருமா வராதா என்ற சர்ச்சையில் சிக்கி ஒரு வழியாக அக்டோபர் 18ம் தேதி தீபாவளியன்று மிகப் பிரம்மாண்டமாக வெளியானது 'மெர்சல்' திரைப்படம். படம் வெளிவந்த பின்னும் டிமானிடைசேஷன், ஜிஎஸ்டி வரி ஆகிய வசனங்களால் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுவே அந்தப் படத்தை 25 நாள் வரை ஓட வைத்திருக்கிறது என்பதுதான் உண்மை. 25 நாளில் 250 கோடியைத் தொட்டிருக்குமா என விஜய் ரசிகர்கள் இந்நேரம் கூகுள் செயது கொண்டிருப்பார்கள்.
ஆந்திரா, தெலுங்கானாவில் நேற்று முன்தினம் வெளியான இப்படத்தின் தெலுங்கு டப்பிங்கான 'அதிரிந்தி' படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இன்றும் நாளையும் அங்கு பல தியேட்டர்களில் 70 சதவீதம் வரை முன்பதிவிற்கான வரவேற்பு இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள்.
25வது நாளான இன்று 250 கோடியைக் கடக்கிறதோ இல்லையோ நாளைக்குள் 250 கோடியைக் கடந்துவிடும் என்றும் சொல்கிறார்கள். விஜய் நடித்த படங்களிலேயே அதிக வசூலைப் பெற்றுள்ள படம் என்ற பெருமையைப் பெற்றுள்ள 'மெர்சல்' படத்தின் மூலம் தயாரிப்பாளருக்கும் நல்ல லாபம் கிடைத்துள்ளது.
அட்லீக்கு விஜய் மீண்டும் ஒரு படம் இயக்கும் வாய்ப்பைக் கொடுப்பார் என்பது மட்டும் உறுதி.