ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர் விஜய் தனது ஒவ்வொரு படங்களின் வெளியீட்டுக்கு பிறகு ஏதாவது ஒரு காரியத்துக்கு பெரிய தொகை நன்கொடை கொடுப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். தன்னை வைத்து படம் இயக்கிய இயக்குனர்கள் 10 பேருக்கு தலா 5 லட்சம் ஒரு முறை வழங்கினார். தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்திற்கு 15 லட்சம் நன்கொடை வழங்கினார். இதேபோன்று பெப்சிக்கு உட்பட்ட சங்கங்கள் பலவற்றுக்கு வழங்கியிருக்கிறார்.
தற்போது மெர்சல் வெற்றியை தொடர்ந்து விஜய், தென்னிந்திய நடன இயக்குனர்கள் மற்றும் நடன கலைஞர்கள் சங்கத்திற்கு 15 லட்சம் நன்கொடை வழங்கி உள்ளார். சில படங்களின் வெளியீட்டின் போது சென்னையை சுற்றியுள்ள பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கினார். இப்படி கொடுப்பதை வெளியிடக்கூடாது என்பது அவரது அன்புக்கட்டளை. அதனால் நன்கொடை பெற்ற அமைப்புகள் அதனை தெரிவிக்காது. நடன கலைஞர்கள் சங்கம் சினிமா தொடர்புடைய என்பதால் தகவல் வெளிவந்திருக்கிறது.