ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் சிரஞ்சீவியின் மகனும், தெலுங்கு நடிகருமான ராம் சரண் தேஜா, ரங்கஸ்தலம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். நாகசைதன்யாவுடன் சமந்தாவின் திருமணம் நடைபெற்ற பிறகும், சில தினங்கள் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் சமந்தா. அதையடுத்து அவர் தற்போது தேனிலவுக்கு சென்று விட்டார்.
இதனால் ரங்கஸ்தலம் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனால் தற்போது ராம்சரணும் தனது மனைவி உபாசனா மற்றும் குடும்பத்தாருடன் இமாச்சல பிரதேசத்துக்கு சுற்றுலா சென்றிருக்கிறார். அங்கு தான் செல்லும் இடங்களின் போட்டோக்கள் எடுத்து அவ்வப்போது இணையபக்கத்தில் பதிவிட்டும் வரும் ராம்சரண், ஒரு மாட்டின் மீது தான் அமர்ந்து வரும் போட்டோவையும், பதிவிட அது சோசியல் மீடியாவில் வைரலாகியிருக்கிறது.