ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரேமம் மலையாள படத்தில் அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன், தற்போது தெலுங்கிலும் பிசியான நடிகையாகி விட்டார். அதிலும் மலையாளத்தை விட தெலுங்கில் அதிகப்படியான படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில், ராம் போதினேனியுடன் இணைந்து அவர் நடித்துள்ள உன்னடி ஒக்காடே ஜிந்தகி என்ற படம் கடந்த அக்டோபர் 27-ந்தேதி திரைக்கு வந்துள்ளது.
இதையடுத்து நேற்று அப்படக்குழுவினருடன் மீடியாக்களை சந்தித்து பேட்டி அளித்தார் அனுபமா பரமேஸ்வரன். அப்போது தன்னை ஏற்றுக்கொண்ட தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்ட அனுபமா, தெலுங்கு சினிமாவில் தனக்கு மிக நெருக்கமான நடிகர் என்று சர்வானந்தை கூறியுள்ளார்.
சினிமாவில் எனது பெஸ்ட் பிரண்டு சர்வானந்த் என்று வெளிப்படையாக கூறியுள்ள அனுபமா, ஒரு நல்ல நண்பர் என்ற முறையில் சினிமா தவிர மற்ற விசயங்களையும் நான் அவருடன் பகிர்ந்து கொள்கிறேன் என்று வெளிப்படையாக கூறியுள்ளார். சர்வானந்தும், அனுபமாவும் தெலுங்கில் சதமானம் பவதி என்ற படத்தில் ஜோடி சேர்ந்து நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.