ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கைதி எண்-150 படத்தை அடுத்து சிரஞ்சீவி நாயகனாக நடிக்கும் படம் சைரா நரசிம்ம ரெட்டி. பாகுபலி படத்தைப்போன்று சரித்திர கதையில் உருவாகும் இந்த படமும் அந்த படத்தைப்போன்று பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் சிரஞ்சீவியுடன் அமிதாப்பச்சன், சுதீப், நயன்தாரா, விஜய் சேதுபதி என பலர் நடிக்கிறார்கள்.
சுதந்திர போராட்ட வீரராக சிரஞ்சீவி நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 20-ந்தேதி ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சில செட் பணிகள் இன்னும் முழுமை அடையாததால் படப்பிடிப்பை டிசம்பர் முதல் வாரத்திற்கு தள்ளி வைத்துள்ளனர். சைரா நரசிம்ம ரெட்டிக்காக ஐதராபாத்திலுள்ள ஒரு அலுமினியம் தொழிற்சாலையில் பிரமாண்ட செட் போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.