ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நாயகனாக நடிக்க தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிக்க 'பிக் பாஸ்' இறுதி நிகழ்ச்சியில் 'இந்தியன் 2' படத்தைப் பற்றிய அறிவிப்பை வெளியிட்டனர். ஆனால், அடுத்த சில நாட்களிலேயே தயாரிப்பாளருக்கும் கமல்ஹாசனுக்கும் இடையே பிரசச்னை, அதனால் படத்தின் நாயகனாக சூர்யா நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியானது. அதன்பின் அப்படியெல்லாம் இல்லை கமல்ஹாசன் தான் நடிக்கப் போகிறார் என்றும் திரையுலக வட்டாரங்களில் தெரிவித்தார்கள்.
ஆனால், இப்போது படத்தின் தயாரிப்பாளரே மாறிவிட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த தயாரிப்பாளரான தில் ராஜு, ஷங்கர் சொன்ன மொத்த பட்ஜெட்டைக் கேட்டு திகைத்துப் போய் 'இந்தியன் 2' படத்தைத் தயாரிக்கும் முடிவை கைவிட்டுவிட்டார் என்கிறார்கள். இதையடுத்து லைக்கா நிறுவனத்திடம் பேசிய ஷங்கர், அவர்களைச் சம்மதிக்க வைத்துவிட்டார் என்றும் சொல்கிறார்கள்.
இதனிடையே, ஷங்கர் தற்போது இயக்கி வரும் '2.0' படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றி வரும் முரளி மனோகர் என்பவர் ஒரு மாத காலமாக சம்பளம் அளிக்கப்படவில்லை என்று முகப் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இது உதவி இயக்குனர்களிடமும் திரையுலகத்தினரிடமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. '2.0' படத்தின் இசை வெளியீட்டு விழாவின் ஒரு டிக்கெட் பல லட்சங்களுக்கு விற்கப்படும் நிலையில் படத்தில் பணியாற்றிய உதவி இயக்குனருக்கு தீபாவளி சமயத்தில் சம்பளம் வழங்காதது பல உதவி இயக்குனர்களையும், இயக்குனர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.