ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மெர்சல் படத்தை வெற்றி படமாக்கிய அனைவருக்கும் நன்றி என நடிகர் விஜய் கூறியுள்ளார்.
தெறி படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் - அட்லீ கூட்டணியில் தீபாவளிக்கு வெளிவந்த படம் மெர்சல். தீபாவளிக்கு முதல்நாள் வரை ரிலீஸாகுமா, ஆகாதா என ரசிகர்களை டென்ஷன்படுத்தி இறுதியில் தடைகள் பல கடந்து ரிலீஸாது.
'மெர்சல்' படத்தின் ஒரு வரிக் கதை கமல்ஹாசன் நடித்த 'அபூர்வ சகோதரர்கள்' படம், விஜயகாந்த் நடித்த 'ரமணா' படம் உட்பட பல படங்களை ஞாபகப்படுத்துவதாக அனைவருமே சொல்லி வருகிறார்கள். ஆனால், அனைத்தையும் தாண்டி படம் அமோக வெற்றி பெற்றிருக்கிறது. விஜய்யின் படங்களில் மெர்சல் படத்தின் வசூல் புதிய சாதனை புரிந்திருப்பதாக கூறப்படுகிறது.
மெர்சல் படம் இப்படியொரு வெற்றி பெற்றதற்கு நடிகர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார். விஜய் தனது பேஸ்புக்கில், மெர்சல் படத்தை மாபெரும் வெற்றி படமாக்கிய அனைவருக்கும் உள்ளம் கனிந்த நன்றிகள் என்று கூறியுள்ளார்.