ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சுதேசிவுட்ஸ் பிலிம்ஸ் சார்பில் ரோஷன் என்பவர் தயாரித்து, நடிக்கும் படம் வெங்கட்சுப்பிரமணி மைக் டெஸ்ட்டிங் 1...2...3. ஹர்ஷிதா பன்வர் என்ற புதுமுக நடிகை கதாநாயகியாக நடிக்கிறார். நான் கடவுள் ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி, கருணாஸ், சரத் லோகிச்த்வா, வம்சி கிருஷ்ணா, யார் கண்ணன், மாரிமுத்து, ஆர்.என்.ஆர்.மனோகர், அனு கிருஷ்ணன், ரிஷா, செவ்வாழை ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஹரியின் உதவியாளர் முருகேஷ் பாரதி இயக்கி உள்ளார். ஷ்யாம் நம்பூதிரி இசை அமைத்துள்ளார், ஜெ.ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் பற்றி ரோஷன் கூறியதாவது:
பொய் பேசுபவர்கள் யாரும் பிடித்து பொய் பேசுவதில்லை. அப்படி பொய் பேசுபவர்கள் யாரும் எங்கள் படத்தை பார்த்தால் நிச்சயம் பொய் பேசமாட்டார்கள். அரசியல்வாதிகள் அதிகமாக பொய் பேசுவார்கள். அவர்கள் பொய் பேசக்கூடாது. இந்த படத்தை பார்த்த பிறகு அவர்கள் எல்லோரும் பொய் சொல்ல தயங்குவார்கள். அந்த அளவுக்கு இந்த படத்தில் புரட்சிகரமான ஒரு கருத்து உள்ளது. இந்த படமே ஒரு புரட்சிகரமான படம் தான். நான் இந்த படத்தில் சேகுவேரா போன்றதொரு புரட்சிகரமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.
சேகுவேரா செஞ்சி அருகே ஒரு கிராமத்தில் பிறந்து மைக் செட்காரனாக இருந்து புரட்சி செய்தால் எப்படி இருக்கும்?? அது தான் எங்கள் படத்தின் கதை களம். நான் அரசியல் கூட்டங்களுக்கு மைக் செட் போடுபவனாக வருகிறேன். அரசியல் கட்சி கூட்டங்களுக்கு மைக் செட் போடும் போது சில பிரச்னைகளை சந்திக்க வேண்டி இருக்கும், அந்த பிரச்னைகளின் மூலம் தான் கதை சூடு பிடிக்கும்.
படத்தில் நாங்கள் பிரதமர் மோடி முதல், சூப்பர் ஸ்டார் ரஜினி வரை சமகால அரசியல் பற்றி பேசியுள்ளோம். படத்தில் புகை பிடிக்கும் காட்சியோ, மது குடிக்கும் காட்சியோ கிடையாது. இந்த படத்துக்காக நான் 250 கிலோமீட்டர் சைக்கிளில் பயணம் செய்துள்ளேன். படத்தை நாங்கள் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் தான் அதிகம் படம்பிடித்துள்ளோம். இப்போது படத்தின் இறுதிகட்ட பணிகளக் நடைபெற்றுவருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.