ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகை வழக்கில் கைதாகி 85 நாட்கள் சிறைவாசம் அனுபவித்த நடிகர் திலீப், கடந்த அக்-5ஆம் தேதி நிபந்தனை ஜாமீனில் விடுதலையானார். அதையடுத்து தான் நடித்து பாதியிலேயே நின்ற கம்மார சம்பவம் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார் திலீப்.
இந்தநிலையில் சிறப்பு புலனாய்வு குழு கூட்டம் இன்று திலீப் வழக்கு குறித்த அடுத்தகட்ட விசாரணைக்காக ஒன்று கூடியுள்ளது. இந்தகூட்டத்தின் முடிவில், திலீப் தற்போதுள்ள 11வது குற்றவாளி என்கிற நிலையில் இருந்து முதன்மை குற்றவாளியாக மாற்றப்படலாம் என்றும் போலீஸ் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. திலீப் வழக்கில் என்ன முடிவுகள் எடுக்கப்பட்டன என்கிற விபரம் இன்று இரவுக்குள் தெரியவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒரு பக்கம் இருக்க, இதைப்பற்றி எல்லாம் அலட்டிக்கொள்ளாத திலீப், ஐப்பசி மாதம் நடைதிறக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று காலை சபரிமலைக்கு சென்று சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்தார். அப்படியே அருகே இருந்த மாளிகைப்புறத்தம்மன் கோவிலிலும் சாமி தரிசனம் செய்த திலீப், சபரிமலை மேல்சாந்தியையும் சந்தித்து ஆசி பெற்றார்.