ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வட இந்திய நடிகையான ரகுல் பிரீத் சிங், தற்போது தமிழ், தெலுங்கில் பிசியான நடிகையாகி விட்டார். இதுவரை வட இந்தியாவில் இருந்தபடியே படங்களில் நடிப்பதற்காக ஐதராபாத், சென்னை என வந்து சென்று கொண்டிருந்த அவர், விரைவில் ஐதராபாத்தில் வீடு பார்த்து குடியேறவும் தயாராகிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில், தெலுங்கானாவின் பேட்டி பச்சோ பேட்டி பாத்ஹோ என்ற பெண்களுக்கான அமைப்பில் தூதராகியிருக்கிறார் அவர்.
அதாவது, மத்தியில் பிரதமர் நரேந்திர மோடியின் அரசு ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களின் நலனை கருத்தில் கொண்டு இந்திய அரசாங்கத்தில் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் பேட்டி பச்சோ பேட்டி பாத்ஹோ என்ற அமைப்பை பல மாநிலங்களில் உருவாக்கியிருக்கிறது. அந்த வகையில் தெலுங்கானாவில் உருவாக்கியுள்ள அந்த அமைப்பின் தூதராக தற்போது ரகுல் பிரீத் சிங் நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த தகவலை தெரிவித்துள்ள அவர், இந்த பொறுப்பை எனக்கு கிடைத்த மரியாதையாக கருதுகிறேன் என்று மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.