ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலகிருஷ்ணா நடிப்பில் தெலுங்கில் தயாராகும் படம் லட்சுமியின் என்.டி.ஆர். ராம்கோபால் வர்மா இயக்கும் இந்த படம் நடிகரும், ஆந்திர முதல்வருமான என்டிஆரின் வாழ்க்கை கதையில் தயாராகிறது. தற்போது கதை விவாதம் நடந்து வரும் நிலையில், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் படத்தை தொடங்கி அக்டோபரில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த படத்தின் கதை குறித்து ராம்கோபால்வர்மா கூறுகையில், என்.டி.ஆரின் வாழ்க்கையில் லட்சுமி பார்வதி என்ட்ரி கொடுத்த போதில் இருந்து இந்த படத்தின் கதை தொடங்குகிறது. 18 அத்தியாயங்கள் கொண்டது என்டிஆரின் வாழ்க்கை. அதில் ஒரு அத்தியாயத்தை மட்டுமே இந்த படத்தில் சொல்லப்போகிறேன். ஆனால் இது கண்டிப்பாக அரசியல் படமில்லை. என்டிஆரின் சினிமா மற்றும் குடும்ப வாழ்க்கைதான் அதிகமாக இடம்பெறுகிறது என்கிறார்.