ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த 85 நாட்களாக சிறையில் இருந்த திலீப்புக்கு சமீபத்தில் அவருக்கு கிடைத்த ஜாமீன் சற்றே ஆசுவாசம் தந்திருப்பது என்னவோ உண்மை. ஆனாலும் ஜாமீன் கிடைக்குமா கிடைக்காதா என சிறையில் அவர் இருந்த சமயத்தில் வெளியே மக்கள் தன் மீது எந்தவிதமான உணர்வுகளை கொண்டிருக்கிறார்களோ என சற்றே கலக்கத்துடன் தான் இருந்திருக்கிறார். அந்த சமயத்தில் தான் கடந்தவாரம் அவர் நடித்த ராம்லீலா படம் வெளியாகி ஹிட்டாகி விடவே, அந்த வெற்றிச்செய்தி திலீப்புக்கு மிகப்பெரிய தெம்பை கொடுத்துள்ளது.
படம் ரிலீசாகி வெற்றி பெற்றதுமே படத்தின் இயக்குனர் அருண்கோபியும், தயாரிப்பாளரும் சிறைக்கே சென்று இந்த இனிப்பான செய்தியை திலீப்பிடம் கூறியுள்ளார்கள். அங்கேயே இயக்குனரை கட்டிப்பிடித்து தனது பாராட்டை தெரிவித்தாராம் திலீப். நேற்று முன்தினம் அவர் சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையானதும் 'ராம்லீலா' படத்தின் இயக்குனர் அருண்கோபி திலீப்பை சந்திக்க அவரது வீட்டிற்கே சென்றுள்ளார். இக்கட்டான நேரத்தில் தனக்கு வெற்றிப்படம் கொடுத்துள்ள அருண்கோபியை நண்பர்கள் வட்டாரத்தில் ரொம்பவே புகழ்ந்து பாராட்டினாராம் திலீப்.