ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
கடந்த 85 நாட்களாக சிறையில் இருந்த திலீப்புக்கு சமீபத்தில் அவருக்கு கிடைத்த ஜாமீன் சற்றே ஆசுவாசம் தந்திருப்பது என்னவோ உண்மை. ஆனாலும் ஜாமீன் கிடைக்குமா கிடைக்காதா என சிறையில் அவர் இருந்த சமயத்தில் வெளியே மக்கள் தன் மீது எந்தவிதமான உணர்வுகளை கொண்டிருக்கிறார்களோ என சற்றே கலக்கத்துடன் தான் இருந்திருக்கிறார். அந்த சமயத்தில் தான் கடந்தவாரம் அவர் நடித்த ராம்லீலா படம் வெளியாகி ஹிட்டாகி விடவே, அந்த வெற்றிச்செய்தி திலீப்புக்கு மிகப்பெரிய தெம்பை கொடுத்துள்ளது.
படம் ரிலீசாகி வெற்றி பெற்றதுமே படத்தின் இயக்குனர் அருண்கோபியும், தயாரிப்பாளரும் சிறைக்கே சென்று இந்த இனிப்பான செய்தியை திலீப்பிடம் கூறியுள்ளார்கள். அங்கேயே இயக்குனரை கட்டிப்பிடித்து தனது பாராட்டை தெரிவித்தாராம் திலீப். நேற்று முன்தினம் அவர் சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையானதும் 'ராம்லீலா' படத்தின் இயக்குனர் அருண்கோபி திலீப்பை சந்திக்க அவரது வீட்டிற்கே சென்றுள்ளார். இக்கட்டான நேரத்தில் தனக்கு வெற்றிப்படம் கொடுத்துள்ள அருண்கோபியை நண்பர்கள் வட்டாரத்தில் ரொம்பவே புகழ்ந்து பாராட்டினாராம் திலீப்.