ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானவர் சி.சத்யா. அதன் பிறகு தீயா வேலை செய்யணும் குமாரு, நெடுஞ்சாலை, பொன்மாலை பொழுது, இவன் வேற மாதிரி, கதை திரைக்கதை வசனம் இயக்கம், காஞ்சனா 2, ஆகிய படங்களுக்கு இசை அமைத்தார். தற்போது பக்கா, அரசுர குலம் படங்களுக்கு இசை அமைத்து வருகிறார். சத்யா இசை அமைக்கும் பாடல்கள் பெரும்பாலும் ஹிட்டாகிறது. ஆனாலும் வர் விஜய், அஜீத் மாதிரி பெரிய படங்களுக்கு ஏன் இசை அமைப்பதில்லை என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில் வருமாறு:
நான் இசையமைக்கும் ஒவ்வொரு படத்திற்கும் பாடல்களுக்கான புரோகிராமிங், மிக்சிங் என அனைத்து வேலைகளையும் நானே செய்கிறேன். வேறு ஆட்கள் வைத்துக் கொள்வதில்லை கோலிவுட்டின் டாப் ஹிரோக்கள் பட வாய்ப்பும் எனக்கு வந்துச்சு, படத்துல கமிட் ஆகுறது விஷயமில்ல, ஆனால் சரியான நேரத்துல பாடல்களும், பின்னணி இசையும் என்னால தர முடியுமான்னு ஒரு தயக்கம் இருந்தது. இதனால் பல படங்களை நான் தவிர்த்துவிட்டேன்.
இனி என்னுடைய வேலையை இன்னும் வேகமாக்கியுள்ளேன். இதனால் பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு சரியான நேரத்தில் என்னால் அவுட்புட் தர முடியும் என்று நம்பிக்கை வந்து விட்டது. இனி பெரிய ஹீªரோக்களின் படங்களில் என்னை பார்க்கலாம். என்கிறார் சத்யா.