ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கற்றது தமிழ், தங்கமீன்கள் ஆகிய படங்களை இயக்கிய பிறகும் மக்களுக்கு தெரியாத இயக்குநராகவே இருந்தார் ராம். அவர் இயக்கிய 'தரமணி' படத்துக்கு கிடைத்த நெகட்டிவ்வான விமர்சனம் காரணமாக ராம் பெயர் பரவலாக தெரிய ஆரம்பித்தது. ஆனாலும் பொருளாதார ரீதியில் இன்னும் சிரமத்திலேயே இருக்கிறார் ராம்.
தரமணி படத்தை இயக்கிய வகையில் அவருக்கு 25 லட்சம் சம்பள பாக்கி இருக்கிறது. நடையாய நடந்தும் சம்பள பாக்கி கைக்கு வரவில்லை. இந்நிலையில் அவரது குழந்தைக்கு பள்ளிக்கூடத்துக்கு ஃபீஸ் கட்ட வேண்டிய நாள் நெருங்கிவிட்டது. தரமணி தயாரிப்பாளர் வழக்கம்போல் பணம் தராமல் இழுத்தடிக்க, இந்த விஷயத்தை கலைப்புலி தாணுவிடம் கொண்டுபோய் இருக்கிறார்கள்.
ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் இரண்டு லட்ச ரூபாய்க்கு செக் கொடுத்து குழந்தையின் ஸ்கூல் ஃபீஸ் கட்டும்படி சொல்லி இருக்கிறார். தற்போது, 'பேரன்பு' என்ற படத்தை இயக்கி வருகிறார் ராம். இப்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள அந்தப்படத்தில் மம்முட்டி, அஞ்சலி நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு பின்னணி இசைஅமைக்கும் பணியில் தற்போது யுவன் ஈடுபட்டுள்ளாராம். 'பேரன்பு' இன்னும் 20 நாட்களில் சென்சாருக்குத் தயாராகிவிடுமாம். இதை முடித்துவிட்டு தாணுவுக்கு படம் பண்ண இருக்கிறார் ராம்.