ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ராம் இயக்கிய கற்றது தமிழ் படத்தில் அறிமுகமானவர் அஞ்சலி. அதையடுத்து நடித்த அங்காடித்தெரு அவரை முன்னணி நடிகையாக்கியது. பின்னர் எதிர்பார்த்தபடி முன்னணி ஹீரோக்களின் படங்களில் அஞ்சலி நடிக்கவில்லை என்றபோதும், அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார். தற்போது பேரன்பு, காளி ஆகிய படங்களில் நடித்து வருகிறார் அஞ்சலி.
இந்த நிலையில், அஞ்சலியின் தங்கை ஆரத்யாவும் தற்போது ஒரு தெலுங்கு படத்தில் அறிமுகமாகிறாராம். ஆனால், அஞ்சலி ஆரம்பத்தில் கிளாமராக நடிக்க மாட்டேன் என்று கூறி வந்த நிலையில், ஆரத்யாவோ கதைக்கேற்ற கிளாமருக்கு நான் ரெடி என வந்த வேகத்திலேயே சூடு காட்டி நடிக்கத் தயாராகி விட்டாராம். நேற்று ஐதராபாத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஆரத்யா, விரைவில் தனது புதிய படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.