ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சில்க் ஸ்மிதா இன்றைக்கும் கவர்ச்சி கன்னி தான். அவர் மறைந்து இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஆனால் அவர் இடத்தை யாராலும் பிடிக்க முடியயில்லை. ஒரு நடிகை தன் சமகாலத்தவர்களை மட்டுமே தன் அழகால் கட்டிப்போட முடியும். ஆனால் சில்க் ஸ்மிதா மட்டும் தான் மூன்று தலைமுறையினரை கட்டிப்போட்டவர். தான் அறிமுகமான காலத்தில் அன்றைய ரசிகர்களையும் அதற்கு முந்தைய 60களின் ரசிகர்களையும் கவர்ந்திழுத்தார். இப்போது அவர் உயிரோடு இல்லாவிட்டாலும் இந்த தலைமுறையினரும் சில்க் ஸ்மிதாவை ஆராதிக்கிறார்கள்.
ஆந்திராவின் குக்கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்த விஜயலட்சுமிக்கு மிகப்பெரிய வரமாக அமைந்தது அவரரு பேரழகு. சாபமாக அமைந்ததும் அதுதான். அவள் பிறந்த கிராமத்திலேயே அவளை 13 வயதிலேயே திருமணம் செய்ய பலர் திட்டம் போட்டார்கள். அதில் ஒருவரின் திட்டம் வெற்றியும் பெற்றது. ஆனால் 13 வயது சிறுமி நடுத்தர வயதை தாண்டிய கணவனின் பாலியல் தொல்லை தாங்க முடியாமல் சென்னை நோக்கி ஓடி வந்தாள். சினிமாவில் உதவி மேக் உமனாக வாழ்க்கையை துவங்கினார். இங்கும் அவர் அதே பிரச்சினைகளை சமாளிக்க வேண்டியது இருந்தது.
வண்டிச்சக்கரம் படத்தின் மூலம் நடிகையாகி சில்க் ஸ்மிதா ஆன பிறகும் அவரை அவர் அழகு துரத்தியது, அரவணைத்துக் கொள்ள ஆயிரம் பேர் முன் வந்தார்கள். திருமணம் செய்து கொண்டு வாழ யாரும் முன்வரவில்லை. அவர் சிறந்த நடிகையாக விரும்பினார். அலைகள் ஓய்வதில்லை, நீங்கள் கேட்டவை, மூன்றாம் பிறை, மலையூர் மம்பட்டியான் உள்ளிட்ட பல படங்களில் அவர் தன் நடிப்பு திறமையை நிரூபித்தார். ஆனாலும் அவரை சினிமா கவர்ச்சி நடிகையாகத்தான் பார்த்தது. அந்த பார்வையே அவரை மரணம் வரைக்கும் கொண்டு சென்றது.
சில்க் ஸ்மிதா திறமையான நடிகை என்பதை சினிமா கண்டுகொள்ளவில்லை. தன்னை தேடி உதவி என்று வருகிறவர்களுக்கு அள்ளிக் கொடுத்ததையும். அவரது ஊரில் பண்ணை முதலாளிக்கு எதிராக போராடிய கிராமத்து மக்களுக்கு அவர் பண உதவி செய்து வந்ததையும், ஒருவரை திருமணம் செய்து கொண்டு குழந்தைகள் பெற்ற நல்லதொரு குடும்ப வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டதையும் இந்த உலகம் அறியாமல் போனது. அவரை வாழ வைத்த அவரது அழகே அவரை சாகவும் வைத்தது.