ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ராஜமவுலி இயக்கிய பாகுபலி, பாகுபலி-2 ஆகிய இரண்டு படங்களும் இந்திய அளவில் அதிக பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட படங்கள். சரித்திர கதையில் உருவான இந்த படங்கள் இந்தியா மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளிலும் வசூல் சாதனை புரிந்தன. இப்படத்தின் மூலம் இந்திய படங்களுக்கான சர்வதேச சந்தை மேலும் அதிகமாகியிருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து ராஜமவுலி எந்த மாதிரியான படத்தை இயக்க போகிறார் என்று அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், தற்போது பாகுபலி, பாகுபலி-2 ஆகிய இரண்டு படங்களையும் இணைத்து இன்னொரு பாகுபலி படத்தை வெளியிடும் முயற்சியில் ராஜமவுலி இறங்கியிருப்பதாக தற்போது டோலிவுட்டில் செய்தி பரவியிருக்கிறது. அதாவது, பாகுபலி இரண்டு பாகங்களிலும் முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளை மட்டுமே இணைத்து விட்டு, மற்ற காட்சிகளை எடிட் செய்யப்போகிறாராம். அந்த வகையில், புதிய பாகுபலி படத்தை 3 மணி நேரம் அளவு கொண்டதாக வெளியிடப்போகிறாராம் ராஜமவுலி.